தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் காந்தி பூங்கா அருகில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதைக் கண்டித்து, மக்கள் அரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டமானது, வழக்குரைஞர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, அயோத்தி நிலம் பௌத்தர்களுக்கு சொந்தமானது என்றும், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதைத் திரும்பப் பெற வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இப்போராட்டத்தில், 50க்கும் மேற்பட்டோர் தகுந்த இடைவெளியைப் பின்பற்றியப்படி பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.