தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பார்களை அடித்து உடைத்த காவல் துறையினர் - பார்களை அடித்து உடைத்த காவல் துறை

தஞ்சாவூர்: மூன்று பார்களை காவல் துறையினரே உடைத்து சுமார் மூன்று லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட பாட்டில்களைக் கொண்ட 41 பெட்டிகளைப் பறிமுதல் செய்தனர்.

liquer recovery
liquer recovery

By

Published : Apr 3, 2020, 10:23 PM IST

காவல் துறை ஆய்வாளர் செங்குட்டுவன் தலைமையிலான தனிப்படையினர் இன்று காலை முதல் மூன்று பார்களுக்குச் சென்று பூட்டை உடைத்து மூன்று பார்களிலும் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

பார்களை உடைக்கும் போது எந்த பார்களிலும் ஊழியர்கள் இல்லை. இந்நிலையில் பார் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் நகரில் திருட்டுத்தனமாக ஏற்கனவே வாங்கி வைத்திருந்த பாட்டில்களை யார் விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஆய்வாளர் செங்குட்டுவன் தெரிவித்துள்ளார்.

மேலும், நகரில் இயங்கும் அனைத்து பார்களும் சோதனையிடப்படுமென்றும் அவர் கூறினார்.

ஆம்புலன்சில் பிறந்த குழந்தை: துரிதமாக செயல்பட்ட மருத்துவப் பணியாளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details