தமிழ்நாடு

tamil nadu

’இஸ்ரோவின் அடுத்த திட்டம் ககன்யான்’ - இஸ்ரோ இணை இயக்குநர் ரெங்கநாதன்

By

Published : Oct 10, 2019, 10:12 AM IST

தஞ்சாவூர்: உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு நடந்த கண்காட்சியில் கலந்து கொண்ட இஸ்ரோ எஸ்பிபியின் இணை இயக்குநர் ரெங்கநாதன், இஸ்ரோவின் அடுத்த திட்டம் ககன்யான்தான் என்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்துள்ளார்.

இஸ்ரோ இணை இயக்குனர் ரெங்கநாதன்

கடந்த நான்காம் தேதி முதல் தமிழ்நாட்டில் சென்னை, கும்பகோணம், கோபிசெட்டிபாளையம், திருவண்ணாமலை ஆகிய நான்கு மாவட்டங்களில் உலக விண்வெளி வாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் உலக விண்வெளி வார விழாவை, அம்மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இஸ்ரோ எஸ்பிபியின் இணை இயக்குநர் ரெங்கநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில், கல்லூரித் தாளாளர் திருநாவுக்கரசு, கல்லூரி முதல்வர் பாலமுருகன், சட்டப்பேரவை உறுப்பினர் அன்பழகன் அன்புமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கண்காட்சியில் விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான பல்வேறு கருவிகளும் பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனைச் சுற்று வட்டாரத்திலிருந்து பல்வேறு பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.

இஸ்ரோ இணை இயக்குனர் ரெங்கநாதன் பேட்டி

இந்நிகழ்வில் பேசிய அவர், ”இஸ்ரோவின் அடுத்த திட்டம் ககன்யான். 2022ஆம் ஆண்டுக்குள் அந்தத் திட்டத்தின் மூலம் இந்தியர் மூவரை விண்வெளிக்கு அனுப்ப இருக்கிறோம். தற்போது இந்திய எல்லைகளை பாதுகாத்திடும் வகையில் செயற்கைக் கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. விண்வெளி ஆய்வால் பல்வேறு துறைக்கும் எல்லையில்லா சேவை புரிவதுதான் விண்வெளி ஆய்வு மையத்தின் நோக்கமாகும்” என்றார்.

மேலும் அன்பழகன், இந்தக் கண்காட்சியைப் பார்க்க மாணவர்களுக்கு ஒரு வாரம் அவகாசம் தர வேண்டும் என்று இஸ்ரோ இணை இயக்குநரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.

இதையும் படியுங்க:

'விக்ரமுடன் இனி தொடர்பில்லை... எங்களது அடுத்த டார்கெட் ககன்யான்தான்!' - சிவன் உற்சாகம்

ABOUT THE AUTHOR

...view details