தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடும்பத் தகராறு: அரிவாளால் வெட்டி மனைவி கொலை! - தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தஞ்சாவூர்: குடும்பத் தகராறில் கணவன் மனைவியைக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

death
death

By

Published : Jun 1, 2020, 5:09 PM IST

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள குருவிக்கரம்பை கிராமத்தைச் சேர்ந்தவர் உதயராஜன் (35). இவரது மனைவி சசிகலா (33). இருவருக்கும் திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. இதனால், கணவன் மனைவிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் சண்டை ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த உதயராஜன், தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மனைவி சசிகலாவை அரிவாளால் தலையின் பின்புறம் வெட்டியுள்ளார். இதில், பலத்த காயமடைந்த சசிகலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பேராவூரணி காவல் துறையினர் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, உதயராஜனைக் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:டெல்லியில் தொடரும் பொது முடக்கம்

ABOUT THE AUTHOR

...view details