தஞ்சாவூர்: சரக டிஐஜி கயல்விழி உத்தரவின்படி கஞ்சா, குட்கா, பான் மசாலா, கடத்தல் மற்றும் விற்பனைகளை தடுக்கும் பொருட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் காவல் உதவி இன்ஸ்பெக்டர் தலைமையிலான தஞ்சாவூர் சரக போலிஸ் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி தமிழ்ப் பல்கலைக்கழக காவல் எல்லைக்குட்பட்ட கருணாவதி நகர் அருகே போலீசார் கண்காணித்த போது இரண்டு கார்களில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.