தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனாவை வரவிடமாட்டோம் - உறுதி மொழி எடுத்து கொண்ட அலுவலர்கள்! - Thiruvaiyaru Corona Pledge

தஞ்சாவூர்: திருவையாறு பேருராட்சியில் இதுவரை கரோனா பாதிப்பு இல்லை என்றும் இனி வரவும் விடமாட்டோம் என்றும் அரசு த்துறை அலுவலர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

கரோனா உறுதி மொழி  அரசு அலுவலர்கள் கரோனா உறுதி மொழி  Corona Pledge  Govt Officers Corona Pledge  Thiruvaiyaru Corona Pledge  திருவையாறு கரோனா உறுதி மொழி
Corona Pledge

By

Published : Apr 21, 2020, 1:33 PM IST

கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அமலில் உள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பேரூராட்சியின் சார்பில் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்கும் பொருட்டு பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், திருவையாறு பேரூராட்சி பகுதியில் இதுவரை யாருக்கும் நோய்தொற்று ஏற்படவில்லை என்பதையும், இனிவரும் நாள்களில் எந்த ஒரு நபருக்கும் நோய்த் தொற்று ஏற்படாமல் இருக்கும் வகையில் பொது சுகாதாரத் துறை, மருத்துவத் துறை, வருவாய் துறை, காவல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, ஊடகத் துறை, பேரூராட்சி துறை ஆகியவை இணைந்து முழு அர்ப்பணிப்போடு பணிபுரிவோம் என உறுதிமொழி எடுத்துகொண்டனர்.

உறுதிமொழி எடுக்கும் அரசு அலுவலர்கள்

இந்நிகழ்வில், வட்டாட்சியர் இளமாருதி, காவல் ஆய்வாளர் ஜெகதீசன், ஊராட்சி ஒன்றிய ஆணையர் சாமிநாதன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், மருத்துத்துறை பணியாளர்கள், திருவையாறு பாரதி பவுன்டேஷன் நிர்வாகி, ஊடகத் துறையினர், பேரூராட்சி பணியாளார்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:கரோனா ஆபத்தும்... புலம்பெயர்ந்த சிரியர்களும்...

ABOUT THE AUTHOR

...view details