தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜரின் 173ஆவது ஆராதனை விழா வருகிற ஜனவரி 11ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்கான பந்தக்கால் நடும் விழா இன்று நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ‘உள்ளாட்சியில் நல்லாட்சி மலர உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும், உள்ளாட்சி தேர்தலை உண்மையாக நடத்த வேண்டும் என்று அதிமுக விரும்புகிறது. ஆனால் திமுக அதனை விரும்பவில்லை. அதன் உண்மை நிலவரம் நேற்று நீதிமன்ற விவாதத்தில் தெரியவந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.