தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அடுத்த மேல்திருப்பந்துருத்தி வேளாண்மை முன்பு கடந்த 2016-17, 17-18 ஆகிய ஆண்டுகளில் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்ட முறைகேடுகள் தொடர்பாகவும், வெளிப்படைத்தன்மை வேண்டியும் பல அறப்போராட்டங்கள் செய்தும், 40க்கும் மேற்பட்ட வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் 2019 குறுவை, 2020 சம்பா, தாளடி, தோட்டக்கலை பயிர்கள் சுமார் மூன்று லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டம் மூலம் பயிர் காப்பீடு பிரீமியம் செலுத்தி உள்ளனர். பயிர் அறுவடை சோதனை முடிந்து 60 நாள்களுக்குள் வழங்கப்படவேண்டிய பயிர் காப்பீடு இழப்பீடு தொகை 2019 குறுவை பயிருக்கு தற்சமயம் 200 நாள்களுக்கு பிறகும் வழங்கப்படாமல் இருக்கிறது.