திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நேற்று (மார்ச் 7) உயிரிழந்தார். அவரது மறைவையொட்டி தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் அனைத்துக்கட்சி சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
திமுக அன்பழகன் மறைவு - பட்டுக்கோட்டையில் அமைதி ஊர்வலம் - DMK Anbazhagan
தஞ்சை: திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் மறைவையொட்டி பட்டுக்கோட்டையில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.
pattukkottai
பெரியார் சிலைக்கருகில் தொடங்கிய நகரின் முக்கிய வீதிகளில் வழியாக வந்து அண்ணா சிலையை அடைந்தது. அங்கு அவருக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், திமுக, காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:க. அன்பழகன் மறைவு: திருவண்ணாமலையில் அமைதி ஊர்வலம்