தமிழ்நாடு

tamil nadu

'உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த தோழமைக் கட்சிகளும் நீதிமன்றம் செல்லும்' - வைகோ

By

Published : Dec 8, 2019, 9:09 PM IST

தஞ்சாவூர்: தமிழ்நாடு அரசு முறையற்ற தேர்தலை நடத்த முயல்வதால் தோழமைக் கட்சிகளும் தேர்தலை நிறுத்த நீதிமன்றம் செல்லும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko, வைகோ
Vaiko

தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். பின்னார் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "திமுக மட்டுமல்ல அனைத்து தோழமைக் கட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளன.

தொகுதி மறுவரையரை முறையாக செய்யாமல், அவசர கோலத்தில் குழப்பத்திற்கு மேல் குழப்பமாக தமிழ்நாடு அரசு இந்த உள்ளாட்சி தேர்தலை நடத்த முயல்கிறது. இதன்மூலம் எப்படியும் தாங்கள் வெற்றிபெற வேண்டும் என்று அரசு நினைப்பதால், நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதற்காக திமுக நீதிமன்றத்தை நாடியுள்ளது" என்றார்.

வைகோ செய்தியாளர் சந்திப்பு

மேலும், வெங்காய விலை ஆட்சியை வீழ்த்தப்போவதாகவும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: அவனியாபுரத்தில் களைகட்டிய வடமாடு மஞ்சு விரட்டுப் போட்டி!

ABOUT THE AUTHOR

...view details