திருவையாறு ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் தலைமையிலான கரோனா வைரஸ் தொற்று நடவடிக்கைகள் குறித்த கலந்தாலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலர்கள், காவல் துறை, தீயணைப்பு துறை அலுவலர்கள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்றத் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
கூட்டத்திற்கு பிறகு பேசிய மாவட்ட ஆட்சியர், ”அனைத்து ஊராட்சிப் பகுதிகள், பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ளாட்சி நிர்வாகத்தால் கிருமி நாசினி தெளிக்கப்படவேண்டும். திருமணம், விசேஷம் ஆகியவற்றில் அரசு அனுமதித்துள்ள எண்ணிக்கையில் மட்டுமே பொதுமக்கள் பங்கேற்க வேண்டும். அப்பகுதியில் கிருமி நாசினி தெளிக்கபட்டுள்ளதா, தொற்று நீக்க நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டதா? என்பதை உள்ளாட்சி துறையினர் கண்காணிக்க வேண்டும். அந்நிகழ்வுகளுக்கு வெளியூர், வெளி மாநிலம், வெளி நாட்டிலிருந்து வந்தவர்களை கூடுமானவரை தவிர்க்க வேண்டும்.