தஞ்சாவூர் மாவட்டம் மானோஜிப்பட்டி சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் மன்னன் மகன் மாதவன் (38). இவர் மீது பல வழக்குகள் உள்ளதால் இவரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தேஷ் முக் சேகர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
இதனையடுத்து தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் அண்ணாதுரை தாக்கல்செய்த ஆவணங்களின் அடிப்படையில் மாதவனை குண்டர் சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியரும் மாவட்ட குற்றவியல் நடுவருமான கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.
குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் உத்தரவு
தஞ்சாவூர்: பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய நபரை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
![குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு! மாவட்ட ஆட்சியர் அலுவலகம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:24:04:1595670844-tn-tnj-02-gundas-act-script-7204324-25072020133344-2507f-00960-947.jpg)
மாவட்ட ஆட்சியர் அலுவலகம்