தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில், மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி தஞ்சை வடக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மாவட்டத் தலைவர் லோகநாதன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வட்டாரத் தலைவர்கள் மகாதேவன், அமர்சிங், ராஜேந்திரன், அறிவழகன், முன்னாள் சேர்மேன் திருநாவுக்கரசு, மாவட்ட பொருளாளர் வழக்கறிஞர் ஆர்.எம். ராஜ், மாவட்ட செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணைப் பொதுச்செயலாளர் ஷாஜகான் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.