தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குடிபெயர்ந்த தொழிலாளர்களை மீட்க வலியுறுத்தி தவ்ஹீத் ஜமாஅத் போராட்டம் - தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

தஞ்சாவூர்:  சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் மக்களை உடனடியாக மீட்கக் கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் இணைய வழிப் போராட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

By

Published : Jun 16, 2020, 2:33 AM IST

கரோனா வைரஸ் காரணமாக உலகின் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு வேலை செய்வதற்காக, மருத்துவத்திற்காக, கல்விக்காக சென்ற தமிழர்கள் பலர் இதனால் தங்கள் ஊர்களுக்கு திரும்ப முடியாமல் சிக்கிக் கொண்டுள்ளனர்.

சொந்த ஊர்களுக்குத் திரும்பி வர முடியாமல் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ்நாடு மக்களை உடனடியாக மீட்கக் கோரியும், அதற்கான செலவுகளை அரசே ஏற்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தியும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மாபெரும் இணைய வழிப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.

அதன்படி மாவட்டம், கிளைகளில் மாபெரும் இணையவழி ஜூன் 15ஆம் தேதி போராட்டம் நடைபெற்றது. இந்த இணைய வழிப் போராட்டத்தில் ஏராளமான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்தபடியே கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பங்கேற்றார்கள்.

தமிழ்நாடு முழுவதும் இந்த இணைய வழி போராட்டத்தில் ஆண்களும், பெண்களும் குழந்தைகளும் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பி இணையவழி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

கும்பகோணம் மாவட்ட அலுவலகத்தில் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள், கிளை கழக நிர்வாகிகள் முகக்கவசம் அணிந்தும் தகுந்த இடைவெளியைப் பின்பற்றியும் கலந்துகொண்டனர்.

மேலும் மக்கள் தங்களது வீட்டின் வாசல்களிலும், மொட்டை மாடிகளிலும் நின்று இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றி அதன் மூலம் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தமிழ்நாடு மக்களை மீட்க குரல் கொடுத்தனர்.

இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் ரஹ்மானி இணையம் வழியாக கண்டன உரையாற்றினார்.

ABOUT THE AUTHOR

...view details