கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக இந்தியாவில் இதுவரை, 600க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டும், பத்து பேர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக நேற்று நள்ளிரவு முதல் 21 நாள்களுக்கு இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப் படுவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அரசின் ஆணையை ஏற்று அனைத்து மாநிலங்களும் நேற்று நள்ளிரவு முதல் ஊரடங்கைப் பின்பற்றி வருகின்றன. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு மாநிலத்தின் நெற்களஞ்சியம் என போற்றப்படும் தஞ்சை மாவட்ட எல்லைகளை காவல்துறையினர் மூடியுள்ளனர்.