தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 19, 2020, 5:12 PM IST

ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நூதன போராட்டம்

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக சிறைச்சாலை போன்ற கூடாரத்தில் சிறுவர்களை அமரவைத்து நூதன முறையில் போராட்டம் நடைபெற்றது.

protest
protest

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூரில் பெரிய பள்ளிவாசல் திடலில் சிஏஏ சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தப் போராட்டத்தில் சிறைச்சாலை போல் கூடாரம் அமைத்து அதில் சிறுவர்களை அமர வைத்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூரில் சிஏஏ-வுக்கு எதிரான போராட்டம்

இதில் பல்வேறு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களும் 500க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு செல்ஃபோன்களில் லைட்டை எரியவிட்டு அரசுக்கு எதிராக குரல் எழுப்பினர்.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் 1,100 மாணவிகள் கடிதம் எழுதி சாதனை!

ABOUT THE AUTHOR

...view details