தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெளிநாட்டில் சிக்கிய கணவரை மீட்டுத்தரக் கோரி மனைவி கண்ணீர் மல்க மனு - கணவரை மீட்டுத்தரக்கோரி பெண் புகார்

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற கணவருக்கு உடல்நிலை சரியில்லாததால், சொந்த ஊருக்கு அழைத்து வரக்கோரி கண்ணீர் மல்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

வெளிநாட்டில் சிக்கிய கணவரை மீட்டுத்தரக் கோரி புகார்!
வெளிநாட்டில் சிக்கிய கணவரை மீட்டுத்தரக் கோரி புகார்!

By

Published : Dec 21, 2021, 10:54 PM IST

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே உள்ள சங்கரனாதர் குடிகாடு பகுதியில் வசிப்பவர் வீரம்மாள். விவசாய கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் புண்ணியமூர்த்தி, 2019ஆம் ஆண்டு உணவக வேலைக்காக துபாய்க்கு சென்றுள்ளார்.

பின்னர், சென்ற இடத்தில் மயங்கி விழுந்து தனது சுயநினைவை இழந்துள்ளார். இந்நிலையில், கடந்த 20 நாட்களாக உடல்நிலை குன்றிய நிலையில் துபாயில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

புண்ணியமூர்த்தியை இந்தியா அழைத்துவர முதலமைச்சர் உள்ளிட்ட பலருக்கும் மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறப்படுகிறது.

இதையடுத்து, வீரம்மாள் வெளிநாட்டில் உள்ள தனது கணவரை மீட்டுத்தரக்கோரி மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க மனு அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க:ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளையன் சிறையில் அடைப்பு

ABOUT THE AUTHOR

...view details