தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சி.ஏ.ஏ.விற்கு எதிரான மாநாடு: இஸ்லாமியப் பெண்கள் 3 ஆயிரம் பேர் பங்கேற்பு - தஞ்சாவூர் சிஏஏ போராட்டம்

தஞ்சாவூர்: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சி சார்பில் மாநாடு நடைபெற்றது. இதில் இஸ்லாமியப் பெண்கள் 3 ஆயிரத்திற்கும் பேற்பட்டோர் பங்கேற்றனர்.

caa protest
caa protest

By

Published : Feb 1, 2020, 3:28 PM IST

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள அதிராம்பட்டினம் நகர் தொகுதியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி எஸ்டிபிஐ கட்சி சார்பில் அதிராம்பட்டினம் கிழக்கு கடற்கரைச் சாலையை ஒட்டியுள்ள மார்க்கெட் பகுதியில் மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் சபியா கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் மூன்றாயித்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெண்கள் கலந்துகொண்டு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகக் கோஷம் எழுப்பியதோடு, தங்கள் கைகளில் உள்ள செல்போன்களில் ’டார்ச் லைட்’ அடித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

பின்னர் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், இந்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்ற பெண்கள் மாநாடு

இதையும் படிங்க: சிஏஏவிற்கு எதிராக இஸ்லாமியர்கள் 1500 பேர் பேரணி

ABOUT THE AUTHOR

...view details