தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 6, 2023, 5:17 PM IST

ETV Bharat / state

தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக நடந்த ஆருத்ரா தரிசனம்

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக நடந்த ஆருத்ரா தரிசனம்
தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக நடந்த ஆருத்ரா தரிசனம்

தஞ்சை பெரிய கோயிலில் கோலாகலமாக நடந்த ஆருத்ரா தரிசனம்

தஞ்சாவூர்:உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜப் பெருமான், சிவகாமி அம்பாள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் ராஜவீதிகளில் வலம் வந்தனர். சிவகங்கை குளத்தில் அஸ்திரதேவருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீர்த்தவாரி சிறப்பாக நடைபெற்றது.

பின்னர், சுவாமிகள் தஞ்சைப்பெரிய கோயிலுக்கு வந்து அங்கு அம்பாள் கோயிலுக்கு உள்ளே நுழைந்து கதவை சாத்திக்கொண்டு நடராஜப் பெருமான் மீது கோபித்து கொண்டு உள்ளே வரவிடாமல் தடுத்து விடுகிறார். இதனையடுத்து சுந்தரர் இரு தரப்பிலும் சமாதானம் செய்து சுவாமியை கோயிலுக்குள் அழைத்து வரும் புராணக் கதையின் வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

மேலும், நடராஜப் பெருமான் கூடியிருந்த பக்தர்கள் மேல் நெல்மணிகளை மழைபோல் தூவி ஆசீர்வதித்தார். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக நேற்று இரவு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:தீபாவளி சீட்டு பெயரில் ரூ.1,200 கோடி மோசடி.. முதலமைச்சர் தனிப்பிரிவில் புகார்!

ABOUT THE AUTHOR

...view details