தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் வழங்கிய எம்எல்ஏ - Tanjore news

தஞ்சாவூர்: மதுக்கூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு கிருமிநாசினி தெளிக்கும் உபகரணங்களை பட்டுக்கோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.

ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் வழங்கிய எம் எல் ஏ
ஊராட்சிகளுக்கு கிருமி நாசினி தெளிக்கும் இயந்திரங்கள் வழங்கிய எம் எல் ஏ

By

Published : May 6, 2020, 7:14 PM IST

கரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் பாதுகாப்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வரும் நிலையில், தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகில் உள்ள மதுக்கூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளுக்கு, கிருமி நாசினி தெளிக்கும் உபகரணங்களை, பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி. சேகர் வழங்கினார்.

கரோனா பாதிப்புகளிலிருந்து தற்காத்துக் கொள்ள உதவும் விதத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மதுக்கூர் ஒன்றிய அலுவலகத்தில் வைத்து இந்த உபகரணங்களை ஊராட்சி மன்றத் தலைவர்களிடம் அவர் வழங்கினார்.

மேலும் துப்புரவுப் பணியாளர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மாத்திரைகள், சீருடைகள் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க:திருச்சி டாஸ்மாக் கடைகளில் முன்னெச்சரிக்கை பணிகள் மும்முரம்

ABOUT THE AUTHOR

...view details