தஞ்சாவூர்: நேற்று இரவு (மே 26) கும்பகோணம் அருகே உள்ள சோழபுரத்தை அடுத்துள்ள அய்யாநல்லூரில் உள்ள மின் மாற்றியிலில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் சோழபுர மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொண்டு பழுதினை நீக்கும்படி முறையிட்டுள்ளனர்.
அய்யாநல்லூர் பொதுமக்கள் முறையிட்டதை தொடர்ந்து கும்பகோணம் அருகே சோழபுரம் மின் வாரிய ஊழியராக பணி புரிந்து வந்த மணிகண்டன் என்பவர் அய்யாநல்லூரில் உள்ள மின் மாற்றியிலில் ஏற்பட்ட பழுதினை நீக்க சென்றுள்ளார்.
அப்போது, மணிகண்டன் பழுதினை சரி செய்து கொண்டிருந்த வேலையில் எதிர்பாராவிதமாக ஒரு மின் வடத்தை கையில் பிடித்துள்ளார் அச்சமயம் அதில் மின்சாரம் வந்துள்ளது, கண் இமைக்கும் நொடியில் மின்சாரம் தாக்கி மணிகண்டன் சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.