தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்’ ரத்த தானம் - விஜய் மக்கள் இயக்கத்தினர் ரத்ததானம்

தஞ்சாவூர் : கரோனா பெருந்தொற்று கால கட்டத்தின் மத்தியில், ரத்த வங்கிகளில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டதைத் தொடர்ந்து, பூதலூர் ஒன்றிய ’தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர்’ தானாக முன்வந்து ரத்த தானம் செய்தனர்.

actor vijay fans donate blood in tanjavur
actor vijay fans donate blood in tanjavur

By

Published : Jun 18, 2020, 1:05 PM IST

கரோனா பெருந்தொற்று கால கட்டத்தில், ரத்த வங்கிகளில் ரத்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பூதலூர் ஒன்றிய தலைமை, தளபதி விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த 56 பேர் தாமாக முன்வந்து ரத்த தானம் செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் திருக்காட்டுப்பள்ளி அரசு தலைமை மருத்துவர் டி.தவல்மதி, ஆலோசகர் ஏ.ஜி.கண்ணன் ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்து நடத்தினர். தானம் செய்யப்பட்ட ரத்த யூனிட்டுகளை தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவர் எம்.ஜெயந்தி, ஆலோசகர் கண்ணன், செவிலியர்கள் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை தஞ்சை மாவட்ட தலைவர் இரா.விஜய் சரவணன் தொடக்கி வைத்தார். பூதலூர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தலைமையில் பூதலூர் வடக்கு, தெற்கு ஒன்றியத் தலைமை, பூதலூர் ஒன்றிய மாணவர் அணித் தலைமை, வடக்கு தெற்கு ஒன்றிய விவசாய அணி, ஒன்றிய தொண்டர் அணி, ஒன்றிய மீனவர் அணி, இணைய அணி, மகளிர் அணி, பூதலூர் நகர, திருக்காட்டுப்பள்ளி நகர விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதையும் படிங்க... 'பிறந்தநாள் கொண்டாட்டங்கள் வேண்டாம், பாதுகாப்பாக வீட்டில் இருங்கள்'

ABOUT THE AUTHOR

...view details