தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருவையாறு அருகே கதண்டு கடித்து 8 பேர் காயம்! - கதண்டு கடித்து 8 பேர் காயம்

தஞ்சாவூர்: திருவையாறு அருகே வயலில் வேலை செய்துகொண்டிருந்தவர்களை கதண்டு தாக்கியதால் எட்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

8 injured in kathandu bite near Thiruvaiyaru
8 injured in kathandu bite near Thiruvaiyaru

By

Published : Nov 30, 2020, 10:09 PM IST

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே பள்ளியக்ரஹாரம் - கும்பகோணம் பிரிவு சாலை அருகேவுள்ள வயலில் சிலர் களை எடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது வயல்வெளி அருகிலிருந்த பம்புசெட்டில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் திடீரென பறந்து அங்கு வேலை செய்துகொண்டிருந்தவர்களை கடித்துள்ளது.

இதில் பள்ளியக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த அந்தோணிசாமி(80), அதே ஊர் சின்ன தெருவைச் சேர்ந்த ஞானசேகரன்(58), மணல்மேடு பகுதியைச் சார்ந்த பிரவீன்குமார்(23), வசந்தா (45) உள்பட 8 பேரை கதண்டு கடித்தது. இதனையடுத்து கதண்டு கடித்த எட்டு பேரையும் தஞ்சை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நடுக்காவேரி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய அலுவலர் கைது!

ABOUT THE AUTHOR

...view details