தமிழ்நாடு

tamil nadu

கடலோர காவல் படையினரின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர்கள்...

By

Published : Sep 7, 2019, 10:39 PM IST

தஞ்சாவூர்: கடலோர காவல்படையினரின் அலட்சியத்தால்தான் நான்கு மீனவர்களின் உயிர் போனது என்று தப்பித்து வந்த மீனவர்கள் கூறியுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர் செய்தியாளர்களுக்கு பேட்டி

ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியிலிருந்து கடந்த 29ஆம் தேதி பைபர் படகு வாங்குவதற்காக மீனவர்கள் 10 பேர் கடலூர் சென்றனர். படகு வாங்கிக்கொண்டு மீண்டும் கடல் வழியாக ராமேஸ்வரம் வந்தபோது மல்லிப்பட்டினம் கடல் பகுதியில் தீடிரென்று ஏற்பட்ட சூறைக்காற்றால் படகு கவிழ்ந்து கடலில் மூழ்கியது. இதில் தத்தளித்த நிலையில் இருந்த 6 மீனவர்கள் மீட்கப்பட்டனர் .

கடலோர காவல் படையினரின் அலட்சியத்தால் உயிரிழந்த மீனவர்கள்...

மற்ற 4 மீனவர்களை தேடும் பணியில் கடலோர பாதுகாப்பு குழும காவல் துறையினரும் மீன்வளத் துறையினரும் ஈடுபட்டுவந்தனர்.

இதனையடுத்து முத்துப்பேட்டை கடல் பகுதியில் இரண்டு உடல்கள் கரை ஒதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் காவல் துறையினர் இருவரின் உடல்களை மீட்டு மல்லிப்பட்டினம் கொண்டு வந்தனர்.

மேலும் இரு மீனவர்களின் உடல் கட்டுமாவடி அருகே கரை ஒதுங்கி இருப்பதாக தகவல் வந்ததையடுத்து காவல் துறையினர் அந்த இரண்டு உடல்களையும் மீட்க சென்றுள்ளனர்.

இந்நிலையில், கடலோர காவல் படையினர் அருகில் இருக்கும்போது உதவிக்கு வர அழைத்தும் அவர்கள் கண்டு கொள்ளாமல் சென்றுவிட்டனர். அவர்கள் உதவியிருந்தால் 4 உயிர்களை காப்பாற்றி இருக்கலாம் என்று மீனவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details