தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நான்காயிரம் விசைத்தறிகளை நம்பி 20 ஆயிரம் குடும்பங்கள் உள்ளன. கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தற்போது மீண்டுவரும் நிலையில், நுால்களின் விலை ஏற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுவருவதாகவும், எனவே மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் 100-க்கும் மேற்பட்ட விசைத்தறி தொழிலாளர்கள் மனு அளித்தனர்.
இது குறித்து தொழிலாளர்கள் கூறுகையில், “நூல்கள் வெளிநாடுகளுக்குப் பெரியளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால், கைத்தறிக்கு அடுத்தபடியாக உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் பயன்படுத்தும் நூல்களும் பன்மடங்கு உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக சேலை விலையும் ரூ.45 உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.