தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 14, 2022, 4:52 PM IST

ETV Bharat / state

வன்னியரசு உட்பட விசிகவினர் பலர் கைது

தென்காசி மாவட்டம், குறிஞ்சாக்குளத்தில் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு அஞ்சலி செலுத்த வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் பலரை காவல் துறையினர் கைது செய்தனர்.

விசிகவினர் கைது
விசிகவினர் கைது

தென்காசி:சங்கரன்கோவில் அருகே உள்ள குறிஞ்சாக்குளத்தில் 1992ஆம் ஆண்டு நான்கு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த குறிஞ்சாக்குளத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விசிகவினர் கைது

இன்று (மார்ச். 14) காலை விசிக துணை பொதுச்செயலாளர் வன்னியரசு தலைமையில், வந்த விசிகவினர் பலர் கக்கன் நகரில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

விசிகவினர் கைது

பின்னர் படுகொலை செய்யப்பட்ட இளைஞர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த குறிஞ்சாக்குளத்திற்கு அவர்கள் செல்ல முயன்றனர். ஆனால், இந்நிகழ்விற்கு காவல்துறை அனுமதி பெறாததால் அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இதையும் படிங்க:கொலை கும்பலிடம் இருந்து நண்பனை காப்பாற்றிய இருவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details