தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுமிக்கு பாலியல் தொல்லை - விசிக நிர்வாகி கைது - பாலியல் வழக்கு

தென்காசியில் 2ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விசிக முக்கிய நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

2ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை
2ஆம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை

By

Published : Mar 25, 2022, 9:54 AM IST

தென்காசிமாவட்டத்திலுள்ள ஒருஅரசுப் பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமி, நேற்று முன்தினம் (மார்ச் 23) பள்ளி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, சிறுமி வசிக்கும் பகுதியைச் சேர்ந்த வீராச்சாமி என்பவர் திண்பண்டங்கள் வாங்கித் தருவதாக கூறி சிறுமியிடம் தனிமையில் தவறுதலாக நடந்துள்ளார்.

இதுகுறித்து பெற்றோரிடம் கூறினால் கொண்றுவிடுவதாக மிரட்டியுள்ளார். இந்நிலையில் சிறுமிக்கு வயிறு வலி ஏற்படவே பெற்றோர் குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது சிறுமி பாலியல் துண்புறுத்தலுக்கு உள்ளானது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சிறுமி நடந்த உண்மையை கூறியதன் அடிப்படையில் பெற்றோர் குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதுகுறித்து விசாரணை செய்த குற்றாலம் காவல் துறையினர், குற்றச் செயலில் ஈடுபட்ட வீராச்சாமி என்பவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வீராச்சாமி என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய நிர்வாகியும், வார்டு உறுப்பினராக இருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

இதையும் படிங்க:பணத்த கொடு... இல்லனா உன் போட்டோவ ஆபாசம மார்பிங் செய்வோம்.. மூன்று இளைஞர்கள் கைது...

ABOUT THE AUTHOR

...view details