தென்காசி: சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டியில் தனது வாக்கினை செலுத்தினார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
உழைக்கும் மக்கள் முகத்தில் பொன் சிரிப்பை காண முடிகிறது - வைகோ - வாக்கு செலுத்திய வைகோ
திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் அமோக வெற்றி பெறும், திமுக தலைவர் முக ஸ்டாலின் முதலமைச்சராக பதவி ஏற்பார் என்றார்.
![உழைக்கும் மக்கள் முகத்தில் பொன் சிரிப்பை காண முடிகிறது - வைகோ vaiko voted in his constituency](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-11297285-832-11297285-1617690840628.jpg)
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட கலிங்கப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி எண் : 155-இல் மதிமுக பொதுச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மற்றும் அவரது மகன் துரை வையாபுரி ஆகியோர் மக்களோடு மக்களாக நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினர்.
மேலும், கரூர் உள்ளிட்ட 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் நடத்தக்கூடாது என அதிமுக மனு அளித்தது தொடர்பான கேள்விக்கு அவர், அந்த மனுக்கள் எல்லாம் குப்பைத் தொட்டிக்கு போய்விடும் என தெரிவித்தார்.