தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 4, 2022, 6:04 AM IST

ETV Bharat / state

ஊருக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம்

தென்காசி கடையம் அருகே சம்பன்குளத்தில் நள்ளிரவு நேரத்தில் ஊருக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

நள்ளிரவில் ஊருக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம்
நள்ளிரவில் ஊருக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம்

தென்காசி:கடையம் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதி அடிவாரத்தில் சம்பன்குளம் கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்துவருகின்றனர். இந்தப் பகுதி வனத்தை ஒட்டியுள்ளதால் கரடி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் இரை தேடிவருவது வழக்கம்.

இந்நிலையில், இந்தக் கிராமத்தில் உள்ள ஹமிதியா தெருவில் பிப்ரவரி 1 அன்று நள்ளிரவில் கரடி ஒன்று புகுந்துள்ளது. அங்கு கட்டட வேலை நடக்கும் வீட்டில் நுழைந்துள்ளது. இதனைப் பார்த்த பொதுமக்கள், சிறுவர், சிறுமியர் அலறி சத்தம் போட்டனர்.

நள்ளிரவில் ஊருக்குள் கரடி உலா வருவதால் பொதுமக்கள் அச்சம்

தொடர்ந்து பொதுமக்கள் அதனை விரட்டி அடித்தனர். கரடி ஊருக்குள் உலா வருவதால் பொதுமக்கள் இரவில் வீட்டை விட்டு வெளியே வரவே அச்சப்படுகின்றனர். எனவே வனத் துறையினர் கரடியைக் கூண்டுவைத்துப் பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டுவிட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: பாம்பு பிடி வீரருக்கு நேர்ந்த விபரீதம்!

ABOUT THE AUTHOR

...view details