தென்காசி மாவட்டத்தின், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளான குற்றாலம், ஐந்தருவி ஆகிய பகுதிகளில் சில நாள்களாக ஒற்றை யானை ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை, விவசாய நிலங்களை நாசப்படுத்தி வந்த நிலையில் அதனை வனப்பகுதிக்கு விரட்ட விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தனர்.
அதன் பேரில் இரு தினங்களுக்கு முன்னர் யானையை வனப்பகுதிக்கு விரட்டச் சென்ற வேட்டை தடுப்புக் காவலர் முத்துராஜ் என்பவரை யானை மிதித்துக் கொன்றது. நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு யானையிடமிருந்து காவலர் உடலை வனத்துறையினர் மீட்டனர்.