தமிழ்நாட்டில் பட்டியல் இனத்தில் உள்ள ஏழு உள்பிரிவுகளை இணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அறிவிக்கக்கோரி அச்சமூக மக்கள், அமைப்புகள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துப்போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
தேவேந்திரகுல வேளாளர் மக்கள் அதிமுகவுக்கு ஆதரவு
இந்நிலையில் மாநில அரசு பரிந்துரையின்படி, தேவேந்திரகுல வேளாளர் என பொதுப்பெயரிட்டு அழைக்க மத்தியில் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் அச்சமூக மக்கள் அதிமுகவுக்கு ஆதரவாக நிலைப்பாட்டை தெரிவித்து வருகின்றனர்.
இதையடுத்து, இன்று (மார்ச். 30) தென்காசி மாவட்டம், கடையநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா பாஜக, பாமக உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகளுடன் பொதுமக்களைச் சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.