தென்காசி:தென்காசி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் டிசம்பர் 5-ஆம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு வருகை தரவுள்ளார்.
இந்த நிலையில், முதல்வரின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தேர்வு செய்யும் பணி இன்று (நவ.20) நடைபெற்றது. வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தலைமையில், தென்காசி மாவட்ட ஆட்சியர் ஆகாஷ், தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா உள்ளிட்ட பல்வேறு உயர் அதிகாரிகள் இடத்தினை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.