தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'கடையைத் திறந்து அரை நாள் கூட ஆகல... அதுக்குள்ள மூட சொல்லிட்டாங்களே' - தென்காசி மாவட்டச் செய்திகள்

தென்காசி: கரோனா தொற்று அதிகமானதைத் தொடர்ந்து, திறந்த கடைகள் அனைத்தையும் அரை நாளிலேயே மீண்டும் மூடுமாறு காவல் துறையினர் உத்தரவிட்டனர்.

sd
dsd

By

Published : May 5, 2020, 4:26 PM IST

Updated : May 5, 2020, 9:29 PM IST

கரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் மே 17ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டாலும் பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. குறிப்பாக, தனிக் கடைகள் திறக்கலாம், வாகனங்களில் குறிப்பிட்ட நபர்கள் வரை செல்லலாம் போன்ற பல்வேறு வழிமுறைகளை அரசு அறிவித்திருந்தது.

அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மெக்கானிக் கடை, சைக்கிள் கடை, ஃபேன்சி ஸ்டோர், ஸ்வீட் கடை உள்ளிட்ட பல்வேறு தனிக்கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. இதனால், மக்கள் வழக்கம்போல் சாலையில் நடமாடி பொருள்களை வாங்கிச் சென்றனர்.

இந்நிலையில், தென்காசியில் புளியங்குடி பகுதியில் நேற்று ஒரே நாளில் ஒன்பது பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தென்காசி மாவட்டம் மீண்டும் சிவப்பு மண்டலத்தில் இணைந்துள்ளது.

சிவப்பு மண்டலமாக மாறியுள்ளதால், தென்காசியில் அமலில் உள்ள தளர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.

உடனடியாக, கடைகளை அடைக்கும்படி காவல் துறையினர் வீதி வீதியாகச் சென்று ஒலிபெருக்கி மூலம் தெரிவித்தனர். கடைகள் திறக்கப்பட சில மணி நேரத்திலேயே அடைக்கத் தொடங்கியது வியாபாரிகளுக்கும், மக்களுக்கும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுவரை தென்காசி மாவட்டத்தில் 49 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஊரடங்கு மீறல்... 4 லட்சம் பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை!

Last Updated : May 5, 2020, 9:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details