தென்காசி:ஆயிரம் ஆண்டுகள் பழமையான புராதானமிக்க சிவத் திருத்தலங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் சங்கர நாராயண சுவாமி கோயில் அமைந்துள்ளது. இங்கு நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து இருந்து தங்களது பரிகாரங்களை செய்து செய்கின்றனர்.
மிக முக்கிய அதிகார தலங்களாகவும் இது விளங்குகிறது. பல்வேறு விதமான திருவிழாக்கள் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த வகையில் ஆடித்தபசுத்திருவிழாவின் அடுத்தபடியாக சித்திரைத்திருவிழா பெரும் விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு நடந்து வருகிறது. சித்திரைத் திருவிழாவிற்கு முன்னதாக சங்கரன்கோயில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் யானை கோமதி அருகில் உள்ள பெருங்கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள கோயிலுக்குச் சென்று, பிடி மண்ணை எடுத்து வரும் வைபவம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோமதி யானை பிடிமண் எடுப்பதைக் கண்டு தரிசனம் செய்தனர். சித்திரைத் திருவிழா நாளை (ஏப்.25) கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ளது. இதனையொட்டி கோலாகலமாக நடைபெற இருக்கும் சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடாக யானை பிடிமண் எடுக்கும் வைபவம் இன்று ( ஏப்.24 ) நடைபெற்றது. சங்கரன்கோயில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் இருந்து சந்திரசேகர சுவாமி கோமளா அம்பிகையுடன் சப்பர பவனியாக, சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.