தென்காசி மாவட்டம் வாசுதேவ நல்லூர் அருகே நெல்கட்டும்செவலில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 305-ஆவது பிறந்த நாள் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது.
நேற்று முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழந்த நிலையில் தமிழ்நாட்டில் அவரது உயிரிழப்பிற்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் தென்காசி மாவட்டம் நெல்கட்டுசெவல் பகுதியில் பூலித்தேவன் வாரிசுகளும், பொதுமக்களும் பேரணியாக வந்து அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.