தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

30-க்கும் மேற்பட்ட செல்போன்களை குறுகிய காலத்தில் மீட்டுக்கொடுத்த காவல் துறை! - Police recovered the Cell Phones in Tenkasi

தென்காசி: தென்காசி காவல்நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதிகளில் தொலைந்துபோன 30-க்கும் மேற்பட்டவர்களின் செல்போன்களை குறுகிய நாள்களிலேயே மீட்டுக்கொடுத்த காவல் துறையினருக்குப் புகார்தாரர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Cell
Cell

By

Published : Sep 1, 2020, 1:02 PM IST

தென்காசி பெரும் வியாபாரத் தலமாகவும் அதிகப்படியான பொதுமக்கள் நடமாட்டத்தைக் கொண்ட பகுதியாகவும் திகழ்கிறது. இதில் கடந்த ஒரு வருட காலத்தில் தென்காசி காவல்நிலைய சரகத்திற்குள்பட்ட பகுதியில் ஏராளமானவர்கள் தங்களது செல்போன்களைத் தொலைத்துவிட்டதாகப் புகார் அளித்துவந்தனர். இது சம்பந்தமாக நிலையத்தில் வரப்பெற்ற புகார்களைப் பெற்று மனு ரசீது வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் குற்றப்பிரிவு காவல் துறை உதவி ஆய்வாளர் மாரிமுத்து, மாதவன் ஆகியோர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இதுவரை 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

செல்போன் தொலைந்துபோன மிகக் குறுகிய காலத்தில் கிடைக்கப்பெற்றமைக்கு உரியவர்கள் தென்காசி காவல் துறையினருக்கு நன்றி தெரிவித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details