தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'இவங்களும் போலீஸ் தான்' - மனநலம் பாதிக்கப்பட்டோரின் பசியைப்போக்கிய காவல் துறையினர் - மனநலம் பாதிக்கப்பட்டோரின் பசியைப்போக்கிய கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர்

கரிவலம்வந்தநல்லூரில் மனநலம் பாதிக்கப்பட்டோரின் பசிப்பிணியைப் போக்கிய காவல் துறையினரின் செயல்பாடு பலரால் பாராட்டப்பட்டு வருகிறது.

மனநலம் பாதிக்கப்பட்டோரின் பசியைப்போக்கிய காவல் துறையினர்
மனநலம் பாதிக்கப்பட்டோரின் பசியைப்போக்கிய காவல் துறையினர்

By

Published : Jan 12, 2022, 5:56 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டம், கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் கரிவலம்வந்தநல்லூர் காவல் துறையினர் ரோந்துப் பணியில் இருந்தபோது சாலையோரம் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஊரடங்கு காரணமாக உணவின்றி இருப்பதை அறிந்து, காவல் துறையினர் அவரை காவல் நிலையம் அழைத்துச்சென்று, குளிப்பாட்டி, புத்தாடைகள் அணிவித்து, அவருக்கு உணவு வழங்கி அனுப்பிவைத்தனர்.

மனநலம் பாதிக்கப்பட்டோரின் பசியைப்போக்கிய காவல் துறையினர்

காவல் துறையினரின் மனிதநேயமிக்க இச்செயலுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கோயில்களில் வைக்கப்படும் CCTV - கண்காணிக்க அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details