தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பாரதியார் நகர் 8ஆம் தெருவில் வசந்தா என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று தனது தாயை பார்ப்பதற்காக வெளியூர் சென்றிருந்தார்.
இந்நிலையில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பீரோவில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 26 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனர். வீடு திரும்பிய வசந்தா வீட்டில் நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து சங்கரன்கோவில் போலீசில் புகாரளித்தார்.