நெல்லை மாவட்டம் வி.கே.புரத்தைச் சேர்ந்தவர் அய்யப்பன் (38). இவருக்கு மனைவி கீதா (26), அஜய், விஜய் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இவர் தென்காசி மாவட்டம் கடையம் காவல் சரகத்தின் கீழ் உள்ள, ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் அய்யப்பன் இன்று வீட்டில் உள்ள கழிவறைக்குச் சென்றபோது வெகுநேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு அய்யப்பன் சந்தேகத்திற்குரிய முறையில் இறந்து கிடந்தார்.