தென்காசி: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிறன்ற 31ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம், செங்கோட்டை காலாங்கரை பகுதியில் நூற்றுக்கும் அதிகமான விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தன.
இங்கு நூற்றுக்கணக்கான சிலைகள் தயாரிக்கும் பணிகள் முடிவுற்று தற்போது விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. குறிப்பாக 2 அடி முதல் 12 அடி உயரம் வரையிலான விநாயகர் சிலைகள், பரமசிவன்-பார்வதி ஆகியோருடன் விநாயகர் இருப்பது, பல்வேறு வாகனங்களில் கம்பீரமாக வீற்றிருப்பது, சிங்கத்தின் மீது அமர்ந்து இருப்பது என்று பல விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தற்போது சிலைகள் தயாரிக்கும் பணி நிறைவடைந்துள்ளது.