தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தாயை அடித்து கொன்ற மகனுக்கு ஆயுள் தண்டனை

தென்காசியில் தாயை அடித்துக் கொலை செய்த மகனுக்கு திருநெல்வேலி மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

By

Published : Oct 8, 2021, 10:10 PM IST

ஆயுள் தண்டனை
ஆயுள் தண்டனை

தென்காசி: செங்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் (70). இவரது இளைய மகன் மாரியப்பன் (44). இவர், 2020ஆம் ஆண்டு, ஜூன் மாதம் தனது தாய் இசக்கியம்மாளை கட்டையால் அடித்துக் கொலை செய்துள்ளார்.

இது குறித்து செங்கோட்டை காவல் நிலையத்தில், மூத்த மகன் பெரியசாமி புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாரியப்பனை கைது செய்தனர். இது குறித்த வழக்கு திருநெல்வேலி மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றஞ்சாட்டப்பட்ட மாரியப்பனுக்கு ஆயுள் தண்டனையும் 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

இதையும் படிங்க:பசுபதி பாண்டியனின் ஆதரவாளர் கொலை வழக்கு: இதுவரை 7 பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details