தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில் விக்ரமசிங்கபுரம், வேம்பையாபுரம், செட்டிமேடு உள்ளிட்டப் பகுதிகளில் இரவு நேரங்களில் சிறுத்தை ஊருக்குள் புகுந்து நாய், ஆடு உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளை, கடித்துக் கொன்று விட்டு, மீண்டும் காட்டுக்குள் சென்று விடும்.
இதனால் அப்பகுதி மக்கள் வெளியில் செல்லவே அச்சமடைந்தனர். இந்த நிலையில் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கூண்டு ஒன்றை வைத்து, வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.