தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நீச்சல் கற்கும் போது நீரில் மூழ்கி உயிரிழந்த சட்டக்கல்லூரி மாணவர் - கிணற்றில் மூழ்கி சட்டக்கல்லூரி மாணவர் உயிரிழப்பு

சங்கரன்கோவில் அருகே சட்டக்கல்லூரி மாணவர்,நீச்சல் பழகும் முயற்சியில் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார்.

சட்டக்கல்லூரி மாணவர் நீச்சல் கற்கும் முயற்சியில் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு.
சட்டக்கல்லூரி மாணவர் நீச்சல் கற்கும் முயற்சியில் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு.

By

Published : Jan 17, 2022, 6:17 AM IST

தென்காசி:சங்கரன்கோவில் சூரங்குடி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி திருமலைச்சாமி. இவரது மகன் தர்மராஜ் கோயம்புத்தூரில் உள்ள சட்டக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டில் படித்து வந்தார்.

பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்த தர்மராஜ் கிராமத்தில் உள்ள அவரது விவசாய கிணற்றில் நீச்சல் பழகுவதற்காகக் கயிறு கட்டி நீந்தக் கற்றுக் கொண்டிருக்கும் போது கயிறு அறுந்தது.இதனால் செய்வதறியாது கிணற்று நீரில் தத்தளித்த மாணவர் தர்மராஜ் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற சங்கரன்கோயில் தீயணைப்பு துறையினர் தர்மராஜின் உடலை மீட்டனர். பின்னர் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து காவல் துறையினர், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:ஜிப்மர் மருத்துவமனையில் ஜனவரி 18ஆம் தேதி முதல் தொலைபேசி மருத்துவ ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details