தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தென்காசியில் 14 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு! - king cobra catch in tenkasi

தென்காசி: ஆரியங்காவு வனச்சரக அலுவலகத்தில் புகுந்த 14 அடி நீளமுள்ள ராஜநாகத்தை சமூக ஆர்வலர் லாவகமாக பிடித்தார்.

தென்காசியில் 14 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு
தென்காசியில் 14 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு

By

Published : Aug 19, 2020, 10:55 PM IST

தென்காசியில் தமிழ்நாடு - கேரள எல்லைப் பகுதியான ஆரியங்காவு வனச்சரக அலுவலகத்தில் 14 அடி நீளமுள்ள ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது. உடனே ராஜநாகத்தை பிடிக்க வனத்துறையினர் பயிற்சி பெற்ற சமூக ஆர்வலரான சுரேஷ் என்பவரை தொடர்பு கொண்டு அழைத்துள்ளனர்.

அதனடிப்படையில் சம்பவயிடத்திற்கு வந்த அவர், ராஜநாகத்தை லாவகமாக பிடித்தார். மேலும் அந்த ராஜநாகத்திற்கு 8 வயது இருக்கும் என்று அவர் கூறினார்.

தென்காசியில் 14 அடி நீளமுள்ள ராஜநாகம் மீட்பு

பின்னர் சுரேஷ் பிடிபட்ட ராஜநாகத்தை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார். இதையடுத்து வனத்துறையினர் அந்த ராஜநாகத்தை பத்திரமாக எடுத்துச் சென்று வனப்பகுதியில் விட்டனர்.

இதையும் படிங்க: 6 அடி நீள சாரைப் பாம்புகளை அசால்ட்டாக பிடித்த 'பாம்பு பாண்டியன்'

ABOUT THE AUTHOR

...view details