தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில் 72 அடி கொள்ளளவு கொண்ட கருப்பாநதி அமைந்துள்ளது. கருப்பாநதி கூட்டுக் குடிநீர் திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் வாயிலாக அப்பகுதியைச் சுற்றியுள்ள ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர்த் தேவை பூர்த்தி செய்யப்பட்டுவருகிறது.
தற்போது கோடை வெயில் காரணமாக அணையானது வறண்டு காணப்படுகிறது. 72 அளவு கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 24 அடி மட்டுமே தண்ணீர் உள்ளது. இதில் 10 அடிவரை சகதி காணப்படுகிறது. தற்போது நீர்மட்டம் குறைவாக உள்ள காரணத்தால் தண்ணீர் வெளியேற்றப்படவில்லை.