தென்காசி:தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள அத்திபட்டியைச் சேர்ந்தவர்கள் சின்ன முனியசாமி - கவிதா தம்பதியர். இதில் சின்ன முனியசாமி கோவில்பட்டியில் சமையல் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கும் இவரது மனைவி கவிதாவுக்கும் கடந்த 4 மாதங்களாக அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று கவிதாவுக்கும் சின்ன முனியசாமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் வாக்குவாதம் முற்றவே கவிதா தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு தனது தாய் வீட்டுக்கு (சாத்தூர்) செல்வதாகக் கூறி புறப்பட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சின்ன முனியசாமி கவிதாவை ஹாலோபிளாக் கற்களால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த படுகாயம் அடைந்த கவிதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.