தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள வடநத்தம்பட்டியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். அரசு மருத்துவரான இவர் மடத்துப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர், வடநத்தம்பட்டி, புளியங்குடி, பாம்புக்கோயில் சந்தை, திருவேட்டநல்லூர், புன்னையாபுரம், சொக்கம்பட்டி, வாசுதேவநல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்களுடன் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்து புகார் மனு அளித்தார்.
அந்தப் புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது:
எனது சொந்த ஊரான வடநத்தம்பட்டி, நான் பணிபுரியும் மடத்துப்பட்டி சுகாதார எல்லைக்குள் உள்ளது. வடநத்தம்பட்டியில் களப்பணியில் ஈடுபடும்போது, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு நபர்கள் மிரட்டல் விடுத்து, பணி செய்யவிடாமல் இடையூறு செய்கின்றனர்.