தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகேவுள்ள பாறைகுளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார் (48). இவருக்கு கண்பார்வையில் குறைபாடு ஏற்பட்டதால் 40 வயதிற்கு மேற்பட்ட அரசு பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிபவர்கள் பெறவேண்டிய பார்வைத்திறனுக்கான தகுதிச்சான்று இவரால் பெறமுடியவில்லை.
எனவே கடந்த ஆறு மாதமாக இவருக்கு ஓட்டுநர் மற்றும் மாற்றுப்பணியும் வழங்கப்படவில்லை. கரோனா காலம் என்பதால் மாற்றுப் பணிக்கான சான்று உடனடியாக சென்னை தலைமையகத்துக்குச் சென்று பெற்றுவரவும் அவரால் முடியவில்லை. இதனால் மனமுடைந்த அவர் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.