தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தந்தை-மகன் மரமம்: தென்காசியில் 2,000 பேர் கறுப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம் - விசாரணைக் கைதிகள் உயிரிழப்பு

தென்காசி: கோயில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் விசாரணைக் கைதிகளாக அடைக்கப்பட்ட தந்தை-மகன் உயிரிழப்புக்கு 2000 வியாபாரிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2000-merchants-denounced-wearing-black-badge-in-tenkasi
2000-merchants-denounced-wearing-black-badge-in-tenkasi

By

Published : Jun 24, 2020, 12:33 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயராஜ் அவரது மகன் ஃபென்னிக்ஸ். அவர்கள் அதே பகுதியில் செல்போன் கடை நடத்திவந்தனர். இந்த நிலையில் அவர்கள் ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்துவைத்திருந்தது தொடர்பாக விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதையடுத்து அவர்கள் விசாரணை கைதிகளாக கோயில்பட்டி கிளைச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். அதையடுத்து அவர்கள் ஜூன் 22ஆம் தேதி உயிரிழந்தனர். அதன் காரணமாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கண்டனங்கள் எழுந்துவருகின்றன.

அதைத்தொடர்ந்து, அவர்களின் உயிரிழப்புக்கு கண்டனம் தெரிவித்து தென்காசி மாவட்ட வியாபாரிகள் சங்கம் சார்பில் 2,000-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க:விசாரணை கைதியாக இருந்த தந்தை, மகன் இறப்பு: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை

ABOUT THE AUTHOR

...view details