தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மகனை கொலை செய்த பெற்றோர் கைது! - Mother, father arrested for killing son

தென்காசி: சங்கரன்கோவில் அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை கொலை செய்ததாக தாய், தந்தையை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மகனை கொலை செய்த தாய், தந்தை கைது
மகனை கொலை செய்த தாய், தந்தை கைது

By

Published : Jul 24, 2020, 7:15 PM IST

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நேதாஜி நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன்(24). இவர் மது, கஞ்சாவிற்கு அடிமையானவர். இதனால் மாரியப்பன் வீட்டில் உள்ளவர்களிடமும் அருகில் உள்ளவர்களிடமும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், இன்று(ஜூலை 24) அவர் தனது பெற்றோர்களிடம் பிரச்னை செய்து விட்டு வீட்டில் உள்ள மாட்டு தொழுவத்தை தீ வைத்து எரிக்க முயற்சி செய்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அவரது தந்தை கண்ணன், தாய் பூமாரி ஆகியோர் சேர்ந்து மாரியப்பனை இழுத்து சென்று வீட்டின் முன்பு உள்ள மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்துள்ளனர். இதில் பலத்த காயமடைந்த மாரியப்பன் உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் மாரியப்பன் உடைலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலைக்கு காரணமான பெற்யோர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: மயிலாடுதுறையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

ABOUT THE AUTHOR

...view details